நாடு திரும்ப முடியாமல் ஹோட்டலிலேயே கலக்கத்துடன் தவிக்கும் இந்திய அணி வீரர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பார்படாசில் கனமழையுடன் சூறாவளிக் காற்று வீசுவதால், இந்திய கிரிக்கெட்டி அணி வீரர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பார்படாஸ் தீவில் நடைபெற்ற டி-20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து இந்திய வீரர்கள் 30-ம் தேதி நாடு திரும்பத் தயாரான நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. 'பிரிவு-4' வகையை சேர்ந்த புயல் என்பதால் மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுகிறது. இதனால் அங்குள்ள சர்வதேச விமான நிலையம், அலுவலகங்கள், கடைகள் மூடப்பட்டு பார்படாஸே ஊரடங்கு போல் காணப்படுகிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலிலேயே முடங்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக  அழைத்து வருவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day