நிலச்சரிவில் சிக்கி மாயமான 30 பேரை தேடும் பணி தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஈக்வடார் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பனோஸ் டி அகுவா சாண்டா நகரில் நேற்று பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 30 பேர் மாயமானதாக கூறப்படும் நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் நிலச்சரிவு, பாறை சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பல நாடுகள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day