நைஜீரியாவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 21 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். பீடபூமி மாகாணத்தில் உள்ள ஜோஸ் நார்த் மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் இடிபாடுகளில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 69 பேர் தற்போது மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Night
Day