நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 140 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 140 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அப்போது, அங்கிருந்த மக்கள் டேங்கர் லாரியில் கசிந்த பெட்ரோலை சேகரிக்க விரைந்தனர். அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடிய நிலையில், டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 140 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Night
Day