பட்டத்தை பாடையில் கட்டி கவன ஈர்ப்பு போராட்டம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கையில் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர். வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. 

பட்டதாரிகள் தங்களுக்கு அரசு வேலை வழங்க கோரி பல்வேறு முழக்‍கங்களை ​எழுப்பினர்.  அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென போராட்டத்தில் வலியுறுத்தினர். மேலும் தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து  போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


Night
Day