பதவிக்காலம் முடியும் வரை அதிபராக நீடிப்பேன்" - பிரான்ஸ் அதிபர் திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2027ம் ஆண்டு முடியும் தனது பதவிக்காலம் வரை அதிபர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்ததால், பிரான்ஸ் அரசு கவிழ்ந்த நிலையில், அதிபர் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நேற்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆற்றிய உரையில், தனது பதவிக்காலம் முடியும் வரை அதிபர் பதவியில் நீடிப்பேன் எனவும், விரைவில் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என்றும், நீங்கள் எனக்கு வழங்கிய பொறுப்பில், இறுதிவரை பணியாற்றுவேன் என்றும் உறுதிபடக்கூறினார்.

Night
Day