பனாமா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் பனாமா பல்கலைகழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பனாமா பல்கலைக்கழகத்தில் வேளாண்துறையில் பயிலும் மாணவ, மாணவிகள் நேற்று களப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த மர்மநபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மாணவ, மாணவிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தலைமறைவான மர்ம நபரை தேடி வருகின்றனர். 

Night
Day