பாகிஸ்தானின் நிழல் உலக தாதா அமீர் பாலஜ் சுட்டுக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானின் நிழல் உலக தாதாவான அமீர் பாலஜ் திப்பு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று சுங்க் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் அமீர் திப்பு பங்கேற்ற போது, மர்ம நபர்கள் சிலர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அமீர் பாலஜ் திப்பு, உயிருக்கு ஆபத்தான நிலையில் லாகூர் ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. நிழல் உலக தாதாவாக வலம் வந்த அமீர் பாலஜ் திப்புவின் தந்தையும், தாத்தாவும், கடந்த காலங்களில் இதேபோன்று முன்விரோதம் ஆகிய காரணங்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day