பாகிஸ்தானில் காவல்நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல் - 10 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் காவல் நிலையத்திற்குள் புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவல் நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் மூன்றே நாட்களில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இதுபோன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

varient
Night
Day