பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடு என இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி அரசு அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராவல்பிண்டி மற்றும் லாகூரில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். போராட்டங்களில் ஏற்பட்ட காயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்தநிலையில், நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டுமென இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து சட்டவிரோதமாக கூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Night
Day