பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து இழுபறி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில், தனிப் பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவைப்படும் நிலையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.  நேற்று முன்தினம் நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் கட்சி 2-வது இடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 266 இடங்களுக்கு சுமார் 200 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மிகப் பெரிய கட்சிகளின் தலைவர்கள் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதால், அங்கு அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

Night
Day