பாகிஸ்தான் - பயங்கரவாத தாக்குதலில் 254 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 254 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு அரசாங்கம், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்தில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இத்தாக்குதல்களில் 90க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும், 50க்கும் மேற்பட்ட காவலர்களும் கொல்லப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Night
Day