பாகிஸ்தான்: குர்ரானுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய ஆடை அணிந்து வந்த பெண் மீது தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானின் லாகூரில் குர்ரானுக்கு எதிரான வாசகங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்த பெண் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. லாகூரை சேர்ந்த பெண் ஒருவர், அரபு மொழியில் குர்ரானுக்கு எதிரான வாசகங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்துக்கொண்டு தனது கணவருடன் அப்பகுதியில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள், குர்தாவை கழற்றுமாறு கூறி அப்பெண்ணை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்கள் மத்தியில் சிக்கிய பெண்ணை பத்திரமாக அழைத்துச் சென்றனர். பின்னர் காவல் நிலையம் சென்ற அப்பெண், மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டார். மேலும், யாருடைய மத உணர்வையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என விளக்கம் அளித்தார். 

Night
Day