பாகிஸ்தான்: சுயேட்சை வேட்பாளரின் அலுவலகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - 14 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்கொலைப்படை தாக்குதலில் 14 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்துக்குட்பட்ட பிஷின் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் அலுவலகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 14 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்கொலை படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day