பிடிவாரண்ட் பிறப்பித்த பிரிட்டன் - கைது செய்யப்பட்ட ஆண்ட்ரூ டேட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சமூக வலைதளங்களில் செல்வாக்கு பெற்ற ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் ட்ரிஸ்டன் ஆகியோர் ரொமானியாவில் கைது செய்யப்பட்டனர். பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஐரோப்பிய யூனியன் பிடிவாரண்ட் பிறப்பித்ததால், டேட்டும், ட்ரிஸ்டனும் ரொமானியாவில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். 2012ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. கைதான இருவரும் புகாரெஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் பிரிட்டனிடம் ஒப்படைப்பது குறித்து நாளை நீதிமன்றம் உத்தரவிடும் என கூறப்படுகிறது.

Night
Day