பிரதமர் மோடியின் ரஷ்ய வருகையையொட்டி கோபுரத்தில் ஜொலிக்கும் இந்தியக் கொடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றுள்ள நிலையில், ஐரோப்பாவின் மிக உயரமான கட்டிடமான மாஸ்கோவில் உள்ள ஓஸ்டான்கினோ கோபுரத்தில், இந்திய தேசியக் கொடியின் வண்ணங்களால் ஜொலிக்க விடப்பட்டுள்ளது. ஆயிரத்து 771 அடி உயரத்தில் நிற்கும் Ostankino TV டவர் உலகின் நான்காவது உயரமான மற்றும் ஐரோப்பாவின் மிக உயரமானதாகும். இது 1967-ல் சோவியத் பொறியாளர் நிகோலாய் நிகிடின் என்பவரால் நிறுவப்பட்டது. இந்தநிலையில், உக்ரைன் மீது மாஸ்கோ படையெடுப்பு தொடங்கிய பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் என்பதால் ரஷ்ய அரசு இந்த கோபுரத்தில் இந்திய தேசியக் கொடியை மிளிரச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day