பிரேசில் கனமழை : வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரேசிலில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.


தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் வெள்ளத்தில் மாயமான நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. 

varient
Night
Day