பிற நாட்டிற்கு தஞ்சம் புகும் சூடான் நாட்டவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சூடான் நாட்டில் வெடித்து வரும் மோதலால் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சூடான் நாட்டின் ராணுவத்திற்கும், துணை ராணுவ விரைவு ஆதரவு படைக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலால் சூடான் நாட்டை சேர்ந்த 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இத்தாக்குதலால் சூடான் நாட்டை சேர்ந்த 1 கோடிக்கும் அதிகமான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். 

Night
Day