புறாக்களை அழித்தொழிக்க மக்களிடம் வாக்கெடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெர்மனியில் புறாக்களை அழிப்பதற்கு பொதுமக்கள் வாக்களித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெர்மனியின் லிம்பர்க் அன்டெர்லானில் உள்ள நகர சபை, புறாக்களை அழித்தொழிக்க நடத்திய வாக்கெடுப்பில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். குறிப்பாக நகரின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள், உணவக உரிமையாளர்கள், சந்தை விற்பனையாளர்கள் புறாக்களை அழித்தொழிக்க பெரிதும் ஆதரவளித்தனர். இதற்கு விலங்கு உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்னும் முடிவு செய்யப்படாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Night
Day