பெண் கைதிகள் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் ஆண்டவர் பிரான்சிஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில்
போப் ஆண்டவர் பிரான்சிஸ் பெண் கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். உலகம் முழுவதும் இன்று இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவு இயேசு கிறிஸ்துவ தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்த பின்பு அவர்களின் கால்களை கழுவி சுத்தம் செய்து முத்தமிட்டார் என்று கூறப்படுகிறது. நாளை மறுநாள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடப்பட உள்ள நிலையில், போப் ஆண்டவர் பிரான்சிஸ் ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் பெண் கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்டு பிரார்த்தனை செய்தார்.

Night
Day