பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்கள் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொலிவியா, காங்கோ, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. 

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கான தூதர்களை நியமிக்கும் பணியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி அல்பேனிய , காங்கோ, பொலிவியா ஆகிய 3 நாடுகளுக்கான இந்திய தூதர்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அல்பேனியா நாட்டிற்கான தூதராக இந்திய அயலக துறையின் மூத்த அதிகாரி ரவீந்திர பிரசாத் ஜெய்ஸ்வால், காங்கோவின் இந்திய தூதராக வி.வெங்கடராமன், பொலிவியாவின் இந்திய தூதராக ரோஹித்குமார் ஆர்.வத்வானா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், குறிப்பிட்ட 3 மூத்த அதிகாரிகளும் விரைவில் இந்திய தூதர்களாக குறிப்பிட்ட நாடுகளின் பதவி ஏற்று கொள்வார்கள் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Night
Day