போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு தயாராகும் ஹமாஸ் - பணயக் கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலுடனான போரை முடிவுக்கு கொண்டு வர, மூன்று கட்டங்களாக போர் நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட ஹமாஸ் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 135 நாட்களுக்கு, 3 கட்டமாக போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என ஹமாஸ் முன்மொழிந்துள்ளதுமுதல் கட்டத்தில், இஸ்ரேல் சிறைகளில் இருந்து  ஆயிரத்து 500 பாலஸ்தீனிய பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும். இதற்குப் பதிலாக காசாவில் உள்ள பெண் பணயக் கைதிகள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும் இரண்டாம் கட்டத்தில் மிஞ்சியிருக்கும் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்டத்திலும் பணயக் கைதிகள் பரிமாற்றம் நடைபெற வேண்டும் என்றும் ஹமாஸ் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Night
Day