மனிதாபிமான முறையில் உதவும் இந்தியாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போரின் வரலாறு புதினுடன் முடிந்து விடுவதில்லை என்பதை அவரிடம் யாராவது சொல்ல வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஐரினா போரோவெட்ஸ் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெறும் ரைசினா கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், தங்களின் பிராந்திய பகுதியை இழந்துவிட்டதாகவும், உக்ரைனுக்கு ஆயுதம் தேவைப்படுவதாகவும் கூறினார். புதினுடன் போரின் வரலாறு முடிந்துவிடாது என்பதையும், தானியங்கள், கோதுமை, எண்ணெய் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறோம் என்பதை புதினிடம் யாராவது சொல்ல வேண்டும் என்றும் ஐரினா போரோவெட்ஸ் வேண்டினார். மனிதாபிமான அடிப்படையிலான இந்தியாவின் உதவிக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஐரினா தெரிவித்தார். 

Night
Day