ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் நீர்நிலைகளுக்குச் செல்லும் போது கவனம் தேவை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்கள் கடற்கரைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகளுக்குச் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த 5 மாணவர்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளனர். இந்தநிலையில் வோல்கோவ் ஆற்றில் குளிக்கச் சென்ற அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்தே ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

Night
Day