ரஷ்யாவில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசுக்கு வேண்டுகோள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாதுகாவலர் பணி மற்றும் நல்ல சம்பளம் என ஏமாற்றியே ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தற்போது போர்க்களத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருப்பதாகவும் இந்தியாவைச் சேர்ந்த 10 இளைஞர்கள் தங்கள் குடும்பங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக தங்களது மகன் சையத் இலியாஸ் வீடியோ அனுப்பியுள்ளதாக கூறியுள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த பெற்றோர், தங்கள் பிள்ளை நாடு திரும்ப மத்திய அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  போர்முனையில் ராணுவத்திற்கு உதவும் பணி என்ற பெயரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்கள் கர்நாடகா, தெலங்கானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. முன்னதாக இவர்களை மீட்க  வேண்டுமென AIMIM எம்.பி. அசாதுதீன் ஓவைசி முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day