ரஷ்யா : நவால்னிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலமாக சென்றவர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலேக்ஸ் நவால்னிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2021 ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலேக்ஸ் நவால்னி அறக்கட்டளை மூலம் பணத்தை கையாடல் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர், ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில், சிறையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில், அவருக்கு பல்வேறு இடங்களில் ஆதரவாளர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி செலுத்துவதற்காக பேரணியாக சென்ற 300க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்துள்ளனர். 

Night
Day