உலகம்
டானா புயலால், ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்திற்கு ரெட் அலர்ட்
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயலால், ஒடிசா, மேற்கு வங்க ...
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான லுகோயிலின் துணை தலைமை செயல் அதிகாரி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. லுகோயிலின் துணை தலைமை செயல் அதிகாரியாக 53 வயதான விட்டலி ராபர்டஸ் என்பவர் இருந்தார். இவர் தனது அலுவலக ஊழியர்களிடம், தனக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாகக்கூறி அறைக்கு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாக அறையில் இருந்து அவர் வெளியே வராததால், அவரது செல்போனுக்கு ஊழியர்கள் தொடர்பு கொண்டனர். அப்போதும் அவர் அலைப்பேசியை எடுக்காததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் சடலமாக தொங்கியதாகக் கூறப்படுகிறது. துணை தலைமை செயல் அதிகாரி ராபர்ட்ஸ் தற்கொலை செய்து கொண்டது குறித்து ரஷ்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயலால், ஒடிசா, மேற்கு வங்க ...
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள?...