ரஷ்ய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு பணியை நிறுத்த இந்தியா வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரஷ்யாவில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்துச் செல்லப்படுவோர், ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுகின்றனர். அவர்களை உக்ரைனுடன் சண்டையிட அனுப்பிவரும் நிலையில், 2 இந்தியர்கள் போரில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியை இந்திய தூரகம் தொடங்கியுள்ளது. இதனிடையே, ரஷ்ய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு பணியை இந்தியாவில் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசை இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது. 

Night
Day