லாவோஸ் ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லாவோஸில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துப் பேசினார். தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இணைந்த ஆசியான் - இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவுக்கும், ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனிடையே, மாநாட்டின்போது, பிரதமர் மோடியை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துப் பேசினார். காலிஸ்தான் பிரிவினைவாதியின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த ஓராண்டுக்கு முன்பு ட்ரூடோ குற்றம்சாட்டிய நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Night
Day