லித்தியம் பேட்டரி ஆலையில் தீ விபத்து - 20 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். தென்கொரிய நாட்டின் ஹவாஸ்சோங் நகரில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 67 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்கள் பலரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்படையினர் தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day