வங்கதேசம்: பிரியாணி உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து - 44 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள பிரியாணி உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்தனர். டாக்கா பெய்லி சாலையில் பிரியாணி உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு நூற்றுக்கும் மேற்பட்டோர் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென கட்டடத்தில் வீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிடம் இடிந்து தரமட்டமாகியதில் இடிபாடுகளில் சிக்கி 44 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். மேலும் தீவிபத்தில் சிக்கி பலர் படுகாயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Night
Day