வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நன்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் தேர்வானதற்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் மோடிக்கு ஷெபாஷ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களவைத் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், அதன் கூட்டணிக் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் வெற்றி பெற்றன. இதையடுத்து ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்குப் பிரதமர் மோடி கடந்த 5ம் தேதி எக்ஸ் வலைத்தளம் மூலமாக வாழ்த்து தெரிவித்த நிலையில், ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அண்டை நாடுகளுடன் சுமூக உறவு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

Night
Day