வெள்ளத்தால் 2,500 வீடுகள் சேதம் - மீட்பு பணிகள் தீவிரம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வியட்நாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வியட்நாமின் ஹா ஜியாங்கில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளப்பெருக்கால் சுமார் 2 ஆயிரத்து 500 வீடுகள் சேதமடைந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. 

Night
Day