ஹாங்காங் நிறுவனத்தில் டீப் ஃபேக்‍ மோசடி மூலம் ரூ. 200 கோடிக்‍கு மேல் முறைகேடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹாங்காங்கில், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, deepfake மோசடி மூலம் 200 கோடி ரூபாய்க்‍கு மேல் முறைகேடு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளது. வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் deepfake மூலம் சம்பந்தப்படுத்தப்பட்டிருப்பதாக ஹாங்காங் போலீசார் தெரிவித்தனர். நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியின் உருவம் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் குளோனிங் செய்யப்பட்டதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த deepfake மோசடி மூலம் 25 புள்ளி 6 மில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய்க்‍கு மேல் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Night
Day