ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து விபத்து - சிலி முன்னாள் அதிபர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிலி நாட்டின் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். சிலி நாட்டின் முன்னாள் அதிபரான செபாஸ்டியன் பினேரா உள்ளிட்ட 4 பேர், நேற்று பிரபல சுற்றுலாதலமான லகோ ரங்கொ பகுதிக்கு தனது சொந்த ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். லேகோ ரேங்கோ நகர் அருகே சென்றபோது, திடீரென ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், செபாஸ்டியன் பினேரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா உயிரிழந்ததை, 3 நாட்கள் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படும் என்று சிலி நாட்டின் அதிபர் கேப்ரியல் போரிக் தெரிவித்துள்ளார்.

Night
Day