''மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்'' : இந்தோனேஷிய புதிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ X தளத்தில் பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாக இந்தோனேசியாவின் புதிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார். 

முன்னதாக அதிபரான  பிரபோவோவுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்துத் தெரிவித்து பதிவிட்டி பிரதமர் மோடி, இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், புதிய தலைமையுடன் பணியாற்ற விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் உணர்வை புரிந்து கொள்வதாகவும் தங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Night
Day