2 தேவாலயங்கள் மற்றும் காவல்நிலையம் மீது தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவில் உள்ள 2 தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தானின் மிகப்பெரிய நகரமான மகச்சலாவிலும், கடலோர நகரமான டெர்பெண்டிலும் நேற்று ஒரே நேரத்தில் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தேவாலயங்கள் மற்றும் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பாதிரியார் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Night
Day