200 நாட்களுக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விண்வெளிக்குச் சென்ற நான்கு பேர், பத்திரமாக தரையிறங்கினர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் ஏவப்பட்ட செயற்கைக்கோளில் 4 வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட ஓடம், 200 நாட்கள் நாட்களில், சுமார் 84.4 மில்லியன் மைல் பயணித்தது. மூவாயிரத்து 184 ஆர்ப்பிட்டல் சுற்றுகளை கடந்த விண்வெளி ஓடம், பத்திரமாக தரையிறங்கியது. நாசா, ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி, ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேசன் ஏஜென்ஸி மற்றும் ரோஸ்கோமஸ் ஆகியவை அனுப்பிய ஓடம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. நாசாவின் ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய வீரர் ஆன்டீரியாஸ் மோகென்சென், ஜப்பானின் சடோஸி புரூகாவா, ரஷ்யாவின் கொன்ஸ்டான்டின் போரிஸ்வோ ஆகிய நால்வரும் புளோரிடமா மாகாணத்தில் பத்திரமாக தரையிறங்கினர். பெரும் வெளிச்சத்துடன், பாராசூட் மூலம் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.  

varient
Night
Day