எழுத்தின் அளவு: அ+ அ- அ
9 மாதங்களுக்குப் பிறகு இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார்.
Roll Visual
2024 ஆம் ஆண்டு ஜூன் 25ல் அமெரிக்காவின் போயிங் ஸ்டார்லைனர் ஸ்பேஸ் கிராஃப்டின் மூலமாக விண்வெளிக்கு அனுப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் உட்பட விண்வெளி வீரர்கள் 8 நாட்களில் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 9 மாதங்கள் விண்வெளியிலேயே சிக்கி தவித்தனர். இந்நிலையில் அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம், விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் பூமிக்கு புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 17 மணி நேர பயணத்துக்குப்பின் இன்று அதிகாலை 3.30 மணியளவில் புளோரிடா கடலில் இறங்கியது.
டிராகன் விண்கலம் கடலில் இறங்கியதும், அதனை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் குழுவினர் கப்பல் மற்றும் படகுகளில் விரைந்தனர். மீட்பு பணிக்கு இடையே கடலில் மிதந்த கேப்சூலை நான்கிற்கும் அதிகமான டால்ஃபின்கள் வட்டமிட்ட காட்சி பிரம்மிக்க வைத்தது.