9 மாதக் குழந்தை, 4 வயது மகனுடன் தாயாரை ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் செல்லும் காட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அக்டோபர் 7-ம் தேதி ஒரு பெண், அவரது 4 வயது மகன் மற்றும் 9 மாத குழந்தையை ஹமாஸ் படையினர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லும் காணொலியை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அவர்களின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை என ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கவலை தெரிவித்தார். இதனிடையே குழந்தைகள் மற்றும் தாய்மார்களை கடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதனிடையே சம்பந்தப்பட்ட 3 பணயக் கைதிகளும் இஸ்ரேல் குண்டு வீச்சில் கொல்லப்பட்டு விட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day