அண்ணனை தேடி வந்து அப்பாவி தம்பியை வெட்டி சாய்த்த கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஆர்.கே. நகர் அருகே இளைஞரை வெட்டிச் சாய்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்.கே. நகர் கருமாரியம்மன் நகர் பகுதியில் வசித்து வந்த தர்மா என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, அப்பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாத் யாதவ், சீனிவாசன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தர்மாவின் அண்ணன் சூர்யாவுக்‍கும் ஜெகன்நாத் யாதவுக்‍கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு கைகலப்பு ஏற்பட்டுள்ளதும், இதற்கு பழிதீர்க்‍கும் விதமாக சூர்யா எங்கே எனக்‍கேட்டு தர்மாவை வெட்டிச் சாய்த்ததும் தெரியவந்தது. 

Night
Day