அமெரிக்காவில் கைக்குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதற்கு பதில் ஓவனில் வைத்த தாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் கைக்குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதற்கு பதில் தாய் ஓவனிற்குள் வைத்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கான்சாஸ் மாகாணத்தை சேர்ந்த மரியா தாமஸ் என்பவர் தனது ஒரு மாதக்குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதற்கு பதிலாக ஓவனிற்குள் வைத்துள்ளார். இதனால், சூடு தாங்காமல் குழந்தை தீக்காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, குழந்தையின் நலனுக்கு ஆபத்து விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day