ஆசிரியர் கல்வியியல் பல்கலை. இணை பதிவாளர் மீது பாலியல் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை காரப்பாக்கத்தில் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவிகளுக்கு இணை பதிவாளர் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. 

சென்னை காரப்பாக்கத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணை பதிவாளராக மோகன் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர், ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும், பாதிக்கப்பட்ட மாணவிகள், பல்கலைக்கழக பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தில் புகாரளித்துள்ளனர். மோகனுக்கு ஆதரவாக, சிண்டிகேட் குழு உறுப்பினர் நடேசன், மற்றும் பல அதிகாரிகள் செயல்படுவதாக மாணவிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் இணைப்பதிவாளர் மோகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக, இணை பதிவாளர் மோகனிடம் இன்று மதியம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day