ஆந்திராவில் பானி பூரி சாப்பிட்ட 2 சிறுவர்கள் மரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் பானி பூரி  சாப்பிட்ட இரண்டு சிறுவர்கள் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஏலூரு மாவட்டம் ஜங்காரெட்டி கூடத்தைச் சேர்ந்த சகோதரர்களான பத்து வயது சிறுவன் ராமகிருஷ்ணாவும் ஆறு வயது சிறுவனான விஜயும் நேற்று முன்தினம் பானி பூரி வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day