ஆந்திரா - மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை - இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் நகரி - புத்தூர் அருகே மூன்றரை வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

அபிகண்ட்ரிகை கிராமத்தை சேர்ந்த மூன்றரை வயது சிறுமி நேற்று வீட்டு வாயிலில் விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுஷாந்த் என்ற இளைஞரிடம் விசாரித்தனர். அதில் இளைஞர் சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொன்று புதைத்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுஷாந்திற்கு தரும அடி கொடுத்து போலிசில் ஒப்படைத்தனர். பின்னர் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

varient
Night
Day