ஆந்திரா : ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கடுமையாக தாக்கிய ஆளுங்கட்சி பிரமுகர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில், ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை ஆளுங்கட்சி பிரமுகர் அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வெங்கடாபுரத்தை சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகரான நட்ராஜ்  பழவங்காபுரம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து, தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த லக்ஷ்மி நட்ராஜை கடுமமையாக எச்சரித்த நிலையில், லட்சுமியின் தலை முடியை பிடித்து இழுத்து  நட்ராஜ் கடுமையாக தாக்கியுள்ளார்.  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், லஷ்மி அளித்த புகாரையடுத்து, போலீசார் நட்ராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day