ஆந்திரா: காவலர்கள் போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் போலீசார் போல நடித்து வேலையில்லா இளைஞர்களுக்கு ரயில்வே போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஹனுமந்து ரமேஷ், சி.ஆர்.பி.எப். பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சொந்த ஊருக்கு வந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது காதலியுடன் இணைந்து போலீஸ் எஸ்.ஐ. எனக்கூறி போலீஸ் உடையில் இருவரும் சுற்றி வந்துள்ளனர். வேலையில்லா இளைஞர்களிடம் ரயில்வே போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 30 இளைஞர்களிடம் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், போலீஸ் போல நடித்து பணமோசடியில் ஈடுபட்ட காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

Night
Day