ஆந்திரா: மகள் மீது ஆசைப்பட்ட ஒருவரை கூலிப்படை ஏவி கொலை செய்த தாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரா அருகே ரவுடி ஒருவரை கூலிபடை ஏவி கொலை செய்த தாய், மகள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். நாகர்கர்னூல் பகுதியை சேர்ந்த ஹிமாம்பி என்ற பெண் கணவரை இழந்து வாழ்ந்து வந்த நிலையில் யூசிப்குடா என்ற பகுதியில் காவலர் ஒருவரின் வீட்டில் தனது மகளுடன் வாடகைக்கு குடியேறியுள்ளார். பின்னர் காவலருக்கும், ஹிமாம்பிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டு, அவரை மயக்கி வீட்டை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். இதையடுத்து அதே வீட்டில் தனது மகளுடன் பாலியல் தொழிலை ஆரம்பித்த ஹிமாம்பிக்கு ரியல் எஸ்டேட் அதிபர் ராமு என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதனால் ஹிமாம்பி மகள் மீது ஆசை கொண்ட ராமு அவரை வேறு யாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க கூடாது என்று தாயை மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹிமாம்பி கூலிப்படையை ஏவி ராமுவை கொலை செய்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக தாய், மகள் உட்பட 8 பேரை கைது செய்தனர்.

Night
Day