ஆன்லைனில் ரிவ்யூ கொடுத்து சம்பாதிக்கலாம் என ரூ.55 லட்சம் மோசடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அருகே இணையதளத்தில் ரிவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி 55 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

 விளாத்திகுளத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், இணையதளத்தில் ரிவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்நபர் மர்மகும்பல் கூறியபடி ரிவ்யூ கொடுத்து சிறிதளவு பணத்தையும் ஈட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து மர்மநபர்கள் ஆசை வார்த்தைகள் கூறி அந்நபரிடம் இருந்து 55 லட்சத்திற்கு மேல் பண மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின்பேரில், குற்றச்செயலில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த 2 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Night
Day