ஆம்னி பேருந்தில் ஐ.டி. இளம்பெண் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இருந்து கோவைக்கு தனியார் ஆம்னி பேருந்தில் பயணித்த பெண் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கோவை மாவட்டம் பாலத்துறை பகுதியை சேர்ந்த கார்மேகம் என்பவரது மகளான மகாலட்சுமி சென்னையில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்றிரவு தனியார் ஆம்னி பேருந்து மூலம் கோவை திரும்பியுள்ளார். பேருந்தில் கீழ் படுக்கையில் பயணம் செய்த மகாலட்சுமி காந்திபுரம் பகுதியில் பேருந்து நின்ற பிறகும் இறங்காமல் இருந்துள்ளார். பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை எழுப்ப முயன்றபோது அவர் அசைவில்லாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியை பரிசோதித்து அவர் உயிரிழந்தது விட்டதாக தெரிவித்தனர்.

Night
Day